Thursday 9 October 2008

பேரின்பத் தழுவல்கள் - 1

பொய் சொல்ல நினைத்தபின் இதில்
உண்மை உரைந்திருக்கும் என ஒருவரேனும்
நினைத்து ரசிப்போர் இப்பாரினில் உளரேனெனில்
உன்னையன்றி வேறு எவர் இறைவா.

கற்றதும் வந்துவிடும் இலக்கணத் தமிழ்கொண்டு
உற்றதாய் உணர்ந்ததாய் உன்னை நினைந்து
உடல் வெந்து உள்ளம் உருகுகையில்
தாயாய் இருந்து தலைவருடுவாய் இறைவா.

நோய் கொல்லும் மருந்தினை உட்கொண்டு
மெய் வளர்க்கும் நிலையது கொண்டபின்
மெய்ப்பொருள் உன்னை மனமேற்றி வைத்திட
உன்மனம் சம்மதம் தந்தாய் இறைவா.

மேனி கொண்டதன் ஞானம் புரியவைத்து
அண்டப்பேரொளி கொண்டு இருளை கொய்து
உண்டெனச் சொல்லி உறங்க வைத்து
அமைதியை போதிக்கும் அருளாளனே இறைவா.

உன்புகழ் பாடிட எண்ண வரம்வேண்டுமென
கேட்டிட வெகுளியாய் ஒதுங்கி
படிதாண்டி வந்துன் அருட்கரம் பற்றியதும்
வேண்டுதல் ஏதுமில்லை இறை வா.

No comments: