Friday 11 September 2009

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 4

எலக்ட்ரானின் எதிர் தன்மையை காட்டியவர் ஜே. ஜே. தாம்ஸன். புரோட்டானின் நேர் தன்மையை காட்டியவர் கோல்ட்ஸ்டெயின். இவர்களின் ஆராய்ச்சியின்படி ஒரு அணுவின் மொத்த நிறையும் நேர்தன்மையுடைய புரோட்டான் துகளால்தான் வருகிறது எனவும் மிக மிக மெல்லிய நிறை கொண்டது எலக்ட்ரான் எனவும் தெரிய வந்தது.

உதாரணமாக எலக்ட்ரான் 1837 மடங்கு புரோட்டானை விட சிறியது என ஹைட்ரஜனில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரிந்தது.

இந்த எலக்ட்ரான்களினால்தான் அணுக்களின் எண் பற்றி எளிதாக அறிய முடிந்தது. இது குறித்து மோஸ்லியின் ஆராய்ச்சிகள் சொன்னது என்னவெனில் எலக்ட்ரான்கள் உலோகத்தினை மோதும்போது எக்ஸ்-ரே கதிர்களை உருவாக்குகிறது இந்த கதிர்களுக்கு எந்தவித தன்மையும் இல்லை அதே வேளையில் ஒரு தனிமத்தில் இருந்து மற்றொரு தனிமமாக மாறும்போது அத்தனிமத்தின் நிறை அதிகரிப்பதாகவும் அது புரோட்டானின் நேர்தன்மையினால்தான் என கண்டறிந்தார். எனவே புரோட்டான் தான் அணு எண்ணுக்கு காரணம் என அறிவித்தார் இது தான் ஒரு அணுவிற்கு அடிப்படையானதும் கூட. ஒரே எண்கள் கொண்ட வெவ்வேறு அணுக்கள் இல்லவே இல்லை என்பதைச் சொல்வதைக் காட்டிலும் இதுவரையிலும் எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மெண்டலீவ் தனிம அட்டவணையை உருவாக்கியவர். இவரது கணிப்புகள் வேதியியலுக்கு பல வகையில் உதவி செய்தன என சொன்னால் மிகையாகாது. மென்டலீவின் ஒருங்கினைப்பு சிந்தனை அற்புதமான செயல்பாடு எனலாம்.

சாட்விக் நியூட்ரானைக் கண்டுபிடித்தார், கண்டுபிடிக்கப்பட்டு 85 வருடங்கள் கூட இன்னும் முற்றுப் பெறவில்லை. இந்த நியூட்ரானின் எடையும் புரோட்டான் எடையும் ஒன்றாக இருந்தது. இதனுடைய கூட்டுத்தான் ஒரு அணுவின் நிறை எனலாம் அதாவது நிறை எண்.

பொதுவாக இந்த எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எல்லாம் எப்படி வந்தது என உள்நோக்கிப் பார்த்தால் ஒன்றுமே புரியாத விசயமாக இருக்கும். இப்படி ஒரு மின்சாரத் தன்மையான சக்தி எப்படி வந்தது?

முதலில் வாயுக்கள் போன்ற தூசுப் பொருட்கள் இருந்து இருக்கிறது என்று சொல்லும் போது அதனிலிருந்து தான் நட்சத்திரங்கள் உருவாகி இருக்கிறது என சொல்லும் போது வேதியியல் வேதம் பேசுகிறது என்று தான் தோன்றுகிறது.

இந்த சூரியனின் ஆயுட்காலம் 13.5 பில்லியன் வருடங்கள் வரை தான் அதில் தற்போது 4.5 பில்லியன் வருடங்கள் முடிந்து விட்டது இனி 7.5 பில்லியன் வருடங்கள் இருக்கிறது அதில் என்னவெல்லாம் நடக்கும் என பில்லியன் வருடம் வீதமாக சொல்லி வைத்து விட்டார்கள். முடிவில் ஒன்றுமே இல்லாத ஒரு சூரியனாய் போய்விடுமாம். இந்த ஆய்வு ஆச்சரியம் தருகிறது.

அறிவியல் கூற்றுப்படி தனிமங்கள் எல்லாம் பின்னால் தோன்றியவை, ஒன்றில் இருந்து ஒன்று மாறி வந்தவை எனும் போது இவையெல்லாம் முன்னால் இருந்தவை எனும் கூற்று அடிப்பட்டு போகும். அப்படி முன்னால் இருந்தவை என்றால் எதற்கு அனைத்து கோள்களும் ஒரே மாதிரியான நிலையை பெறவில்லை என்ற கேள்வியும் எழும். இயற்பியலும் வேதம் பேசுகிறது.

இந்த தட்பவெப்ப நிலையே உயிர் வாழச் சாதகமானது என சொல்லப்படும் பட்சத்தில் காற்றில்லாமல் வாழும் உயிரினங்கள், தரையில் வந்தால் செத்துப் போகும் உயிரினங்கள், தண்ணீரில் சென்றால் தவித்துப் போகும் உயிரினங்கள் என பிரிந்து இருக்கும் பட்சத்தில் மற்ற கோள்களிலும் உயிர்கள் இருக்கத் தானே செய்யும்? கண்ணுக்குத் தெரியாமல் வாழும் உயிரினங்களா அவை? கேட்கும் சப்தம் இருக்கிறதே அதைக் கூட அளந்து வைத்து இருக்கிறார்கள். அதனை டெசிபல்ஸ் எனப்படும். அந்த அளவுக்கு உட்பட்ட சப்தம் மட்டுமே நாம் கேட்கமுடியும்! அப்படியெனில் உயிரியலும் வேதம் பேசுகிறது!

2 comments:

வால்பையன் said...

மிக உபயோகமான பதிவு!

நன்றி தல!

Radhakrishnan said...

ஆஹா, தல யா?

இன்றுதான் தங்களின் பெயருக்கானத் தன்னடக்கத்தின் அர்த்தத்தை அறிந்து கொண்டேன். அதி அற்புதம்.

மிக்க நன்றி ஐயா.